முறைத்துக்கொண்டே பிறந்த குழந்தை! இணையத்தில் வைரலாகும் போட்டோ

 

முறைத்துக்கொண்டே பிறந்த குழந்தை! இணையத்தில் வைரலாகும் போட்டோ

பிரேசிலில் பிரசவம் பார்த்து, தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்த மருத்துவரை குழந்தை ஒன்று முறைத்துப் பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

பிரேசிலில் பிரசவம் பார்த்து, தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்த மருத்துவரை குழந்தை ஒன்று முறைத்துப் பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

ரியோ டி ஜெனிரோவில் கடந்த 13 ஆம் தேதி பிறந்த இசபெலா என்ற பெண் குழந்தை பிறந்தவுடன் அமைதியாக இருந்ததால் அந்த குழந்தையை அழவைக்க மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். அவ்வாறு அழுதால் குழந்தையின் நுரையீரல் நன்றாக இயங்குகிறது என்று அர்த்தம். அதற்காக மருத்துவர்கள் பிறந்த குழந்தை அழுகிறதா என செக் செய்வதுண்டு. ஆனால், ஒரு இசபெலா பிறந்ததுமே, தான் பிறப்பதற்கு உதவிய மருத்துவரை முறைத்துப் பார்த்துள்ளது. 

Baby

என்னை ஏன் அழ வைக்க முயற்சிக்கிறீர்கள்? என இசபெலா நினைத்திருக்கலாம் அல்லது அதற்குள் ஏன் வெளியே எடுத்தீர்கள்? என நினைத்திருக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். பிறந்தவுடன் அழாமல் மருத்துவர்களை முறைத்துக்கொண்டிருந்த இசபெலா, தொப்புள் கொடியை வெட்டியபிறகுதான் அழுததாக தெரிகிறது. புகைப்படக் காரர் ஒருவர் இந்த காட்சியை அழகாக படம்பிடித்துள்ளார்.