முருகன் தந்தை மறைவு… சீமான் இரங்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகனின் தந்தை காலமானார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகனின் தந்தை காலமானார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இராசீவ் வழக்கில் சிறையிலிருக்கும் தம்பி முருகனின் தந்தை வெற்றிவேல் அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் தம்பி முருகன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்குகொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இராசீவ் வழக்கில் சிறையிலிருக்கும் தம்பி முருகனின் தந்தை வெற்றிவேல் அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அவரை இழந்து வாடும் தம்பி முருகன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்குகொள்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) April 27, 2020