முருகனின் வெள்ளிக் கவசம், உண்டியல் பணம் திருட்டு : சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள்!

 

முருகனின் வெள்ளிக் கவசம், உண்டியல் பணம் திருட்டு : சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள்!

சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ளது தண்டாயுதபாணி முருகன் கோவில். இந்த கோவிலில் நேற்று பூஜை முடிந்தவுடன் அர்ச்சகர் பூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ளது  தண்டாயுதபாணி முருகன் கோவில். இந்த கோவிலில் நேற்று பூஜை முடிந்தவுடன் அர்ச்சகர் பூட்டிக் கொண்டு சென்றுள்ளார். அதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அர்ச்சகர் பூட்டிக் கொண்டு சென்றவுடன் கோவிலுக்கு உள்ளே சென்று வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல கோவிலைத் திறக்க சென்ற அர்ச்சகர் முருகனின் 20 கிலோ மதிப்புள்ள வெள்ளிக்கவசம், உண்டியல் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

ttn

விரைந்து சென்ற போலீசார், தடவியல் நிபுணர்களை கொண்டு திருடியவர்களின் கை ரேகையைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதித்த போலீசார் இரண்டு கொள்ளையர்கள் நகையைத் திருடிச் சென்றுள்ளதைக் கண்டு பிடித்தனர். இதனையடுத்து இந்த திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.