முருகனின் மூன்று மயில் எது? ஆறுமுகமான செந்திலாண்டவனின் தத்துவம் என்ன?

 

முருகனின் மூன்று மயில் எது? ஆறுமுகமான செந்திலாண்டவனின் தத்துவம் என்ன?

படைத்தல் கடவுளான பிரம்மனை நான்முக கடவுள் என்கிறோம். முருகனை ஆறுமுகன் என்று வழிபடுகிறோம். ஆறுமுகமான முருகனின் தத்துவம் என்ன என்று தெரியுமா? பிற கடவுள்களுக்கு எத்தனை முகங்கள் என்பதைப் பார்ப்போம்.
ஒரு முகம் – மஹா விஷ்ணுவுக்கு
இரு முகம் – அக்னிக்கு
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு
நான்முகம் – பிரம்மனுக்கு
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு

படைத்தல் கடவுளான பிரம்மனை நான்முக கடவுள் என்கிறோம். முருகனை ஆறுமுகன் என்று வழிபடுகிறோம். ஆறுமுகமான முருகனின் தத்துவம் என்ன என்று தெரியுமா? பிற கடவுள்களுக்கு எத்தனை முகங்கள் என்பதைப் பார்ப்போம்.
ஒரு முகம் – மஹா விஷ்ணுவுக்கு
இரு முகம் – அக்னிக்கு
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு
நான்முகம் – பிரம்மனுக்கு
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு

murugan

கந்தனை ஆறுமுகனாக வழிபடுவதற்கான காரணத்தை நக்கீரர் விளக்குகிறார். ஒவ்வொரு முகமும் எதற்காக என்பதையும் திருமுருகாற்றுப்படையில் விளக்கிச் சொல்கிறார்.  உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், பக்தர்களுக்கு அருள் ஒரு முகம், வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம். 
அதனால் தான் ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தால் வேலனை வலம் வந்து துதிக்கிறோம். சரவணபவ என்பது ஷடாக்ஷர மஹா மந்திரம்.
இந்த மந்திரத்தில் ச என்பது லக்ஷ்மிகடாக்ஷம். ர என்பது ஸரஸ்வதி கடாக்ஷம். வ என்பது போகம் – மோக்ஷம். ண என்பது சத்ருஜயம். ப என்பது  ம்ருத்யுஜயம். வ என்பது நோயற்ற வாழ்வைக் குறிக்கிறது.  பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களைப் பெறலாம். 
இப்படி சக்தி வாய்ந்தது தான் முருகனின் ஆறு படை வீடுகளும். இந்த ஆறு படை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை – அனாஹதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை

murugan

இத்தனை சக்திகளை உடைய ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களிலும், கந்த சஷ்டியிலும் துதித்து வழிபட்டு பலன்களைப் பெறுவோம்.  
முருகனின் வாகனம் மயில் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகனுக்கு மூன்று மூன்று மயில்கள் இருப்பது தெரியுமா? ஞானப்பழமான மாம்பழத்திற்காக முருகன் உலகை வலம் வந்தது உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே? அப்படி மாங்கனிக்காக உலகைச் சுற்றி வருவதற்கு உதவிய மயில் மந்திர மயில் என்று போற்றப்படுகிறது. இது முதலாவது மயில். அதன் பிறகு சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாக உருமாறி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில்.  பின் சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில் தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் எனும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் ஸ்லோகங்கள் தான்.