மும்பை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; புகார் அளிக்க அலைக்கழித்த போலீசார்!

 

மும்பை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; புகார் அளிக்க அலைக்கழித்த போலீசார்!

மும்பையின் அந்தேரி ரயில் நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை (நேற்று முன்தினம்) இரவு 10.30 மணிக்கு பாந்த்ரா நோக்கி 24 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார்

மும்பை: ரயில் நிலையத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளான இளம் பெண்ணிடம் புகாரை ஏற்றுக் கொள்ளாமல் போலீசார் அலைக்கழித்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையின் அந்தேரி ரயில் நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை (நேற்று முன்தினம்) இரவு 10.30 மணிக்கு பாந்த்ரா நோக்கி 24 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். பாந்த்ரா ரயில் நிலையத்தில் இறங்கி படிக்கட்டுகளில் சென்றுள்ளார். படிக்கட்டில் மின் இணைப்பு வசதி இல்லாமல் இருந்துள்ளது, அத்துடன் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் அப்பெண் பாலியல் தொந்திரவுக்கு உள்ளாகியுள்ளார். இருட்டாக இருந்ததால் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது யார் என அப்பெண்ணுக்கு தெரியவில்லை.

abuse

தொடர்ந்து, படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும், தன்னிடம் அத்துமீறிய இளைஞரை அடையாளம் கண்டு கொண்ட அந்த, அங்கு ஏதேனும் போலீசார் இருக்கிறார்களா என பார்த்துள்ளார். அந்த சமயத்தில் போலீஸ் சீருடை அணிந்த இரண்டு பேரை கண்ட அப்பெண், அவர்களிடம் சென்று நடந்தததை கூறியுள்ளார். மேலும், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த போலீசாரோ, காவல் கட்டுப்பட்டு அறையை தொடர்பு கொள்ள சொல்லியுள்ளனர். அதன்படி, அப்பெண் தொடர்பு கொண்ட போது, அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த அப்பெண்ணுக்கு இரவு 11.30 மணியளவில் போலீசாரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு தாங்கள் வந்து விட்டதாகவும், ஆனால், அந்த இளைஞர் அங்கு இல்லை எனவும், நீங்கள் இங்கு இருந்தால் அவரை அடையாளம் காட்டுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலளித்த அப்பெண் தான் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறியுள்ளார்.

mumbai police

இதுகுறித்து அப்பெண் கூறுகையில், சம்பவம் குறித்து தொடர்ந்து தான் டிவிட்டரில் பதிவிட்டதாகவும், அதற்கு பின்னரே போலீசாரிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்பு என்று வரும் போது போலீசார் இதுபோன்று அலட்சியமாக செயல்படக் கூடாது என அப்பெண்ணும், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் சமூக வலைதளவாசிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை (நேற்று) இரவு தான் போலீசார் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க

மனைவியின் காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த கொடூரம்?!