மும்பை தாஜ் ஹோட்டலின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 

மும்பை தாஜ் ஹோட்டலின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தாஜ் ஹோட்டலை சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மும்பை: தாஜ் ஹோட்டலை சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மும்பை தாஜ் ஹோட்டலை சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மும்பை மரைன் லைன் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்கள் ஹோட்டலில் வந்து தங்கலாம் என தாஜ் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

taj hotel

இதைத் தொடர்ந்து பல மருத்துவர்கள் தாஜ் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி வந்தனர். ஆனால் அவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. அந்த மருத்துவர்கள் மூலமாக தாஜ் ஹோட்டலின் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.