முன் பின் தெரியாத நபருடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன் – நடிகை அதிதி ராவ் டாக்!

 

முன் பின் தெரியாத நபருடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன் – நடிகை அதிதி ராவ் டாக்!

நடிகை அதிதி ராவ் இந்தி படத்தின் ஆடிஷனின் போது தெரியாத நபருடன் நெருக்கமாக நடிக்கும் நிலை ஏற்பட்டது பற்றி கூறியுள்ளார். 

சென்னை: நடிகை அதிதி ராவ் இந்தி படத்தின் ஆடிஷனின் போது தெரியாத நபருடன் நெருக்கமாக நடிக்கும் நிலை ஏற்பட்டது பற்றி கூறியுள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. அதைத்தொடர்ந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடத்துத்திருந்தார். 

அதிதி ராவ்

இந்த நிலையில் இந்தியில் சில படங்களில் நடித்திருந்த அவர், தெரியாத நபருடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது குறித்து, ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர்,கூறியதாவது ‘இந்தியில் ‘ஏ சாலி ஸிந்தகி’ என்ற படத்தில் நடிப்பதற்கு முன்னாள் அதன் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்போது தெரியாத நபருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் நிலை ஏற்பட்டது. அவர் அந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த அருனோதய் சிங் தான். அவர் சில படங்களில் நடித்திருந்தாலும், அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவருடன் அப்படி நடிக்கையில், என்னதான் நடக்கிறது என்று புரியாமல் இருந்தேன். இருப்பினும் அவர் மிகவும் அமைதியானவராக இருந்தார்.

அதிதி ராவ்

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பாம்பே’ படத்தில் நடிகை மனிஷா கொய்ராலாவின் பாடல் மற்றும் நடனத்தைப் பார்த்துத்தான் நடிகையாக வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் அதை முழுமையாக முடித்துவிட்டேனா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து திரையில் தோன்ற விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.