முன்னாள் முதலமைச்சரின் பேரனை தாக்கிய ஸ்விக்கி ஊழியர்கள்! 

 

முன்னாள் முதலமைச்சரின் பேரனை தாக்கிய ஸ்விக்கி ஊழியர்கள்! 

மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வரின் கொள்ளுப்பேரனை, உணவு டெலிவரி செய்ய வந்த ஸ்விக்கி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வரின் கொள்ளுப்பேரனை, உணவு டெலிவரி செய்ய வந்த ஸ்விக்கி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

CCTV

மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த முனுசாமி நாயுடுவின் கொள்ளுப்பேரனான பாலாஜி, சென்னை அசோக் நகரில் வசித்துவருகிறார். ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவரும் பாலாஜி, நேற்று இரவு ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை டெலிவரி செய்ய்ய வந்த ராஜேஷ் கண்ணா என்பவருக்கும் பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பேச்சுவார்த்தை தகராறாக மாறியுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த மேலும் 3 ஸ்விக்கி ஊழியர்கள் மற்றும் ராஜேஷ் கண்ணாவின் தந்தை ஆகியோர் இணைந்து பாலாஜியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் அவரை தாக்கிய 5 பேரையும் கைது செய்தனர்.