முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்!

 

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்!

அதிமுகவில் தன்னை இணைத்து கொண்ட இவர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. 

 பாமக சார்பில் 1998 ஆம் ஆண்டு சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எழில்மலை அப்போதையை  வாஜ்பாய் தலைமையிலான  அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்து கொண்ட இவர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 

tt

இந்நிலையில்  தலித் எழில்மலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுராந்தகம் அருகே இரும்பேடு கிராமத்தில் அவரது உடல் எளிய முறையில் மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தலித் எழில்மலை இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.