முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: மோடி மலர் தூவி மரியாதை!

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  நினைவு தினம்: மோடி மலர் தூவி மரியாதை!

டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  நினைவு தினம்: மோடி மலர் தூவி மரியாதை!

புதுடெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான  வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான  அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல், 1999 வரை, 13 மாதங்கள், பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில், பிரதமராக பதவி வகித்தார். பின், 1999- 2004 வரை, மீண்டும் பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்தார். லோக்சபாவிற்கு, 10 முறையும், ராஜ்யசபாவுக்கு, இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

நாட்டின் உயரிய  விருதான பாரத ரத்னாவுக்கு சொந்தக் காரரான  வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார்.  96 வயதில் காலமான வாஜ்பாயின் மறைவு பாஜகவினர் மட்டுமல்லாது பலவேறு அரசியல் கட்சித் தலைவர்கள்  மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் வாஜ்பாய் மறைந்து  இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனால் அவரின் முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில்  பாஜக நிர்வாகிகள் பலரும்  கலந்து கொண்டனர்.