முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி! 

 

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி! 

`சட்டமன்ற சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு’ என்ற வசனத்துக்கு சொந்தக்காரரான பி.எச். பாண்டியன் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

`சட்டமன்ற சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு’ என்ற வசனத்துக்கு சொந்தக்காரரான பி.எச். பாண்டியன் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன், முத்தரசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார், திருமாவளவன், கீ. வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பி.எச். பாண்டியனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

 பி.எச். பாண்டியன்

இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் பி.எச்.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.