முன்னாள் கிரிக்கெட் வீரர் பையோபிக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி

 

முன்னாள் கிரிக்கெட் வீரர் பையோபிக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி

சேதுபதி முன்னாள் கிரிக்கெட் வீரரின் பையோ பிக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: விஜய் சேதுபதி முன்னாள் கிரிக்கெட் வீரரின் பையோ பிக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 

சச்சின், தோனி, ஆசாருதின், கபில் தேவ் என்று இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது புதிதாக இதில் இணைந்துள்ளது யாரது என்றால் இலங்கை சேர்ந்த முத்தையா முரளிதரன் தான்.

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் முத்தையா முரளிதரன். அதற்காக 800 என்று இந்த படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இதில் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.