முன்னாள் காதலியை பழிவாங்க நினைத்த அரசு அதிகாரி..! ஐஏஎஸ் அகாடமியில் காதல் கலாட்டாக்கள்!

 

முன்னாள் காதலியை பழிவாங்க நினைத்த அரசு அதிகாரி..! ஐஏஎஸ் அகாடமியில் காதல் கலாட்டாக்கள்!

ஐஏஎஸ் பயிற்சிக்காக அகாடமியில் ஒன்றாகப் படித்த போது காதலித்த பெண், தன்னை மறந்து விட்டதால் ஆத்திரத்தில் அவரது கணவரை சிக்க வைக்கும் விபரீத முயற்சியில் இறங்கியிருக்கிறார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்.  தற்போது மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் ரஞ்சன்

ஐஏஎஸ் பயிற்சிக்காக அகாடமியில் ஒன்றாகப் படித்த போது காதலித்த பெண், தன்னை மறந்து விட்டதால் ஆத்திரத்தில் அவரது கணவரை சிக்க வைக்கும் விபரீத முயற்சியில் இறங்கியிருக்கிறார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்.  தற்போது மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் ரஞ்சன் (45) என்பவர் 20 வருடங்களுக்கு முன்னர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது பயிற்சி வகுப்புக்குச் செல்லும் போது, அதே ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் மீது ரஞ்சனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. பயிற்சி காலங்களில் இருவரும் ஒன்றாகவே பேசியும், பழகியும் வந்துள்ளனர்.

lovers

அந்த பெண்ணிற்கும் ரஞ்சனைப் பிடித்துள்ளது. ஆனால் இந்த நட்பும், காதலும் அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியாக ஆனவுடன் முடிவுக்கு வந்தது. சமர்த்துப் பெண்ணாக வீட்டில் பார்த்த வேறு மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் அந்த பெண். திருமணம் நடந்தாலும் தொடர்ந்து அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் நட்பு முறையில் பேசி வந்திருக்கிறார் ரஞ்சன் சிங். 
ஒரு கட்டத்தில் நட்பு மீண்டும் எல்லை மீறி செல்ல ஆரம்பமாகவே, இவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார் அந்த பெண். இதனால் பழைய காதலை நினைத்துப் பார்த்து, அவரை பழிவாங்க முடிவெடுத்த ரஞ்சன் விபரீதமான செயலில் இறங்கினார். அந்த பெண்ணின் கணவர் காருக்குள் போதைப்பொருளை வைத்து விட்டு, சிஐஎஸ்எப் அதிகாரிகளிடம் வேறு ஒரு மொபைல் நம்பரில் இருந்து, காரில் போதைப் பொருள் இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.

criminal

தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் உடனே வந்து காரை சோதனை செய்து, 3 இடங்களில் போதைப் பொருட்களைக் கண்டு பிடித்தனர். ஆனால் காருக்குள் போதைப்பொருள் 3 இடங்களில் இருந்ததும், முதலில் டெல்லி காவல்துறைக்கு தகவல் சொல்லாமல் தங்களுக்கு தகவல் சொன்னது ஏன் என்று சிஐஎஸ்எப் அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தகவல் வந்த மொபைல் நம்பரை ஆராய்ந்து பார்த்ததில் அந்த நம்பர் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஒருவருக்கு சொந்தம் என்பது தெரிய வந்தது. அவரிடம் சென்று விசாரணை நடத்தியதில் யாரோ இருவர் அவசரமாக வந்து போன் கேட்டனர். அவசரம் என்று கேட்டதால் கொடுத்தேன். யாரிடம் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை என்றார். இதையடுத்து பெட்ரோல் பங்க் சிசிடிவியை ஆராய்ந்த போது, அதில் ரஞ்சனும், அவரது நண்பரும் போன் வாங்கி பேசியது தெரிய வந்தது. போலீசார் காவலில் தற்போது பழைய காதலை நினைத்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாராம் ரஞ்சன்.