முந்திரிதோப்பில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்: 9 மாதங்களுக்கு பிறகு அம்பலமான மனைவியின் நாடகம்!

 

முந்திரிதோப்பில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்: 9 மாதங்களுக்கு பிறகு அம்பலமான மனைவியின் நாடகம்!

ஊ.மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மேற்கிருப்பு கிராமத்தில் உள்ள முந்திரித்தோப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஆணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த ஊ.மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 9 மாதங்களாக நடந்த இந்த வழக்கில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரை வைத்து ஆராய்ந்ததில், டலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த சுதா என்ற 34 வயதான பெண்ணின் கணவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சுதாவிடம் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். 

ff

இதனால் போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சுதா கணவர் ஸ்ரீதரை தனது கள்ளக்காதலான 23 வயது சிவராஜூடன் சேர்ந்து கொலை செய்து எரித்தது தெரியவந்தது.  இதுகுறித்து சுதா அளித்த வாக்குமூலத்தில், “ஸ்ரீதரனுக்கும் சுதாவுக்கும்  கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல்  திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மோகன்(13), பரணி(9) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீதரன், பெரம்பலூரில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள பஸ்களுக்கு பொறுப்பாளராக இருந்து வந்தார்.  இவர் தனது வீட்டிற்கு சிவராஜ் என்பவரை உதவிக்காக அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அப்போது சுதாவுக்கும் சிவராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ஸ்ரீதர் இல்லாத நேரத்தில் கூட சிவராஜ் சுதாவை சந்திக்க வந்துள்ளார் இதுகுறித்து அக்கம்பக்கதினர் கூறியும் ஸ்ரீதர் நம்பவில்லையாம். 

ஆனால்  கடந்த 11.7.2019 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஸ்ரீதரன், பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி சுதாவும், சிவராஜியும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை பார்த்து சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுதா கணவரை சிவராஜூடன் சேர்த்து கொலை செய்து பின்னர் அவரது உடலை தனது தங்கையின் காரின் மூலம் கொண்டு சென்று முந்திரித்தோப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.  மேலும் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க போலீசில் கணவரை காணவில்லை என புகார்  கொடுத்துள்ளார். கொலை செய்து 9 மாதங்கள் ஆன நிலையில் போலீஸ் பிடிக்கததால்  தங்களை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்து ஜாலியாக இருந்த நேரத்தில் தான் போலீஸில் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். இதையடுத்து சுதா மற்றும் சிவராஜை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.  காதல் கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.