முந்தியடித்துக் கொண்டு சென்ற இரண்டு ஸ்கூல் பஸ்.. விபத்தில் 15 மாணவர்கள் காயம் !

 

முந்தியடித்துக் கொண்டு சென்ற இரண்டு ஸ்கூல் பஸ்.. விபத்தில் 15 மாணவர்கள் காயம் !

அதே போல நேற்று முன் தினம்  மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு பேருந்துகள் சென்றுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தனியார்ப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பள்ளி வாகனம் மூலமே வீட்டிற்கு அழைத்துச் செல்லப் படுவார்களாம். அதே போல நேற்று முன் தினம்  மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு பேருந்துகள் சென்றுள்ளன. பேருந்துகளை ஓட்டிச்சென்ற டிரைவர்கள், போட்டிப் போட்டுக் கொண்டு முந்தியடித்துக் கொண்டு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளனர். 

ttn

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அந்த இரண்டு பேருந்துகளும் ஒன்றோடொன்று மோதியுள்ளன. இந்த விபத்தில் வாகனங்களில் இருந்த 15 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த மாணவர்களுள் 7 பேர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையிலும், 8 பேர் திருப்பத்தூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேருக்குப் படுகாயம் அடைந்ததால், அந்த மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.