முத்தம் கொடுக்காததால் பள்ளி மாணவியை கொலை செய்த காதலன்!
பிங்கியின் ஆண் நண்பரான ராமன் சிங் சயானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மத்திய பிரதேசம்: முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி பிங்கி. 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பிஜாபுரி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அதன்பின்னர் பிங்கி வீடு வந்து சேரவில்லை. இதனால் அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிங்கியின் உடலை வனப்பகுதியிலிருந்து கைப்பற்றினர்.
இதையடுத்து பிங்கியின் ஆண் நண்பரான ராமன் சிங் சயானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதில் ராமன்சிங், பிங்கிக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் மறுத்ததால் அவரை தள்ளிவிட்டுள்ளார். இதில் பிங்கியின் தலைப்பகுதி கல்லில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து ராமன் சிங் சயானை போலீசார் கைது செய்தனர்.