முத்தமிட சொல்லி வற்புறுத்தி பெண்களை கொடூரமாக தாக்கிய கும்பல்: பேருந்தில் நடந்த பயங்கரம்!
பேருந்தில் பெண்களை தாக்கி இளைஞர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: பேருந்தில் பெண்களை தாக்கி இளைஞர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உருகுவே நாட்டைச் சேர்ந்த மெலானா கெய்மோட், அவரது தோழி கிறிஸுடன் லண்டன் மாநகரத்தில் உள்ள கேம்டன் டவுனில் கடந்த மே 30-ம் தேதி இரவு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் நபர்கள் சிலர் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதோடு, தங்களுக்கு முத்தம் கொடுக்கும் படி வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் அதற்கு அந்த இரு பெண்களும் மறுக்கவே அவர்களை ஓரினச்சேர்க்கையாளர் என்று அழைத்ததோடு, பலமாக தாக்கியுள்ளனர். இதனால் பெண்களின் முகத்தில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பெண்கள் இருவரும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக 4 சிறுவர்களைக் கைது செய்துள்ளனர்.இது குறித்து மெலினா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த மர்ம ஆசாமிகள் அந்த பெண்களின் பொருட்களையும் பறித்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.