முதியோர் இல்லத்தில் இருந்து எஸ்கேப்.. ஊரடங்கு காலத்தில் மூதாட்டி செய்த வேலைய பாருங்க!

 

முதியோர் இல்லத்தில் இருந்து எஸ்கேப்.. ஊரடங்கு காலத்தில் மூதாட்டி செய்த வேலைய பாருங்க!

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் பீதியில் இருக்கின்றன. அதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் பீதியில் இருக்கின்றன. அதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல ஜெர்மனியிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், புரூன்ஸ்விர்க் நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து   அந்த மூதாட்டி ஒருவர் அங்கிருந்து  நள்ளிரவில் வெளியேறியுள்ளார். 101 வயதான அந்த மூதாட்டி, தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து ரகசியமாக சென்றுள்ளார். 

ttn

அந்த மூதாட்டி ரோட்டில் சுற்றித்திரிந்ததை பார்த்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த மூதாட்டி, தான் மகள் வீட்டில் வசித்து வருவதாகவும் வழி தவறி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மூதாட்டியை அவரது மகளின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். மூதாட்டியை பார்த்த அவரது மகள், தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற தான் வந்திருக்கிறார் என்று உண்மையை போட்டுடைத்துள்ளார். இதனால் கடுப்பான போலீசார், மீண்டும் இத்தகைய செயலை செய்ய வேண்டாம் என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.