முதியவரின் உயிரை குடித்த ஒரு கோப்பை பீர் ! தந்தைக்கு ஊத்திக் கொடுத்து அனுப்பி வைத்த பிள்ளைகள் !

 

முதியவரின் உயிரை குடித்த ஒரு கோப்பை பீர் ! தந்தைக்கு ஊத்திக் கொடுத்து அனுப்பி வைத்த பிள்ளைகள் !

ஒவ்வொரு மனிதனும் மரணிப்பதற்கு முன்னர் ஏதாவது ஆசை இருக்கும். சிலர் சொத்தை பிரித்து கொடுக்க நினைப்பர். சிலர் தனக்கு பிடித்த உணவு சாப்பிட விரும்புவர். சிலர் கடைசியாக ஒருமுறை குழந்தைகளை பார்க்க வேண்டும் என நினைப்பர்.

ஒவ்வொரு மனிதனும் மரணிப்பதற்கு முன்னர் ஏதாவது ஆசை இருக்கும். சிலர் சொத்தை பிரித்து கொடுக்க நினைப்பர். சிலர் தனக்கு பிடித்த உணவு சாப்பிட விரும்புவர். சிலர் கடைசியாக ஒருமுறை குழந்தைகளை பார்க்க வேண்டும் என நினைப்பர்.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த 87 வயது முதியவருக்கு சற்று வித்தியாசமான ஆசை எழுந்தது. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் வசித்து வந்த நாபர்ட் ஸ்கீம் என்ற முதியவர் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய 4 மகன்களுடன் சேர்ந்து ஒரு பீர் குடிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது மகன்கள் பீர் பாட்டில் வாங்கிக் கொடுத்து தந்தையுடன் ஒரு போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

old man

இந்த புகைப்படத்தை அவரது பேரன் ஆடம் ஸ்கீம் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்தபோது அவரின் தாத்தா உயிருடன் இல்லை. மகன்களுடன் பீர்பாட்டிலுடன் சிரித்துக்கொண்டிருக்கும் தாத்தா உயிரிழந்துவிட்டதாக பேரன் குறிப்பிட்டிருந்தார். அவர் பகிர்ந்த அந்த புகைப்படம் சில நிமிடங்களில் 3,20,000 லைக்குகள், 31,000-க்கும் மேலான ரீட்வீட்கள் என்று வரவேற்பைப் பெற்றது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதே சமயம் முதியவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு தங்கள் குடும்பத்தில் நேர்ந்த அனுபவங்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கடைசி ஆசை நிறைவேறும்போது பலபேரின் ஆன்மா சாந்தியடைவதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.