முதல் முறையாக விஜய் படத்திற்கு பாடல் பாடிய துல்கர் சல்மான்!
நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் துல்கர் சல்மான் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் துல்கர் சல்மான் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பிஸியாக நடித்து வருபவர் துல்கர் சல்மான். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் இந்தியில் நடித்துள்ள சோயா பேக்டர் என்கிற படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி மலையாளத்தில் ashokante adhyarathiri படத்தை தயாரித்து வருகிறார்.
இவர் நடிப்பது மட்டுமின்றி பாடவும் ஆரம்பித்துள்ளார். ஆம்… நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது உருவாகிவரும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் துல்கர் சல்மான் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இது குறித்து படக்குழு கூறியதாவது, ‘விஜய் தேவரகொண்டாவிற்காக அவர் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் மிக நன்றாக வந்துள்ளது. ஏற்கனவே விஜய் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து மகாநடி படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.