முதல் முறையாக தனது இரட்டை குழந்தையின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்தம்பி ஹீரோ

 

முதல் முறையாக தனது இரட்டை குழந்தையின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்தம்பி ஹீரோ

நடிகை பிரஜன் தனது இரட்டை குழந்தையின் கியூட் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகர் ப்ரஜின் தனது இரட்டை குழந்தையின் கியூட் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னதம்பி சீரியல் மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்தவர் நடிகர் ப்ரஜின். இவரின் மனைவி சாண்ட்ரா தலையணை பூக்கள் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். 

இவர்களுக்குத் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழிந்த பிறகு கர்ப்பமாக இருந்த சான்ராவிடம்  ஏன் இத்தனை ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என கேட்டதற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் ஒரு பதிலளித்திருந்தார். 
 

prajin

காதல் திருமணம் செய்துகொண்டதால், பண உதவி மற்றும் ஆறுதல் சொல்ல கூட எங்களுக்கு யாருமே துணையா இல்ல. எங்களிடம் இருந்த சில பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையைத் துவங்கினோம். எங்களைக் காப்பாற்றிக் கொள்ள இத்தனை வருடங்களாக வேலை, வேலை என ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. 

ப்ரஜின் சில காலம் வேலை இன்றி இருந்தார். தற்போது சின்னதம்பி சீரியல் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம்” என கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்த இந்த தம்பதிகளுக்குக் காத்திருந்ததற்கு ஏற்றவாறு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். 
 

தற்போது ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் மனைவி சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்து அளவற்ற மகிழ்ச்சியாகத் தென்படுகிறார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.