முதல் முறையாகத் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி

 

முதல் முறையாகத் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி

பிக் பாஸ் முதல் சீசன்னில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்து பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இவர் தனது நீண்ட நாள் காதலர் சிவக்குமாரைக் கடந்த ஆண்டு கரம் பிடித்தார். அதையடுத்து படங்களில் நடிப்பதைத் தவிர்த்து விட்டு குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.  இவர் சில மாதங்கள் முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து தனது வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

இவர்களுக்குக் கடந்த 21ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக  அவரின்  கணவர் சிவகுமார் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் . அதில், ‘என் பையன் சிம்பா வந்தாச்சு. விரைவில் உங்களை சந்திப்பான். ஆகஸ்ட் 21-ம் தேதி என் வாழ்வில் மறக்க முடியாத நாள். நான் நடித்த ஃபிங்கர்டிப் என்ற வெப் சீரிஸும் இந்த நாளில் தான் ரிலீஸ். என் மகனும் இந்த பூமிக்கு வந்த நாள்’ என்று கூறினார். 

MySincere Txs to Dr.Kanimozhi,I am truly Blessed to be guided by her therapy.She is the Best Dr,I have ever met in my life.Besides being a Dr,she has taken an utmost care as mother,being with me always.I am truly Blessed to have myChild been brought to see theworld,by her hands? pic.twitter.com/fCidMNAmYB
— SujaVaruneeShivakumar (@sujavarunee) August 23, 2019

இந்த நிலையில் நடிகை சுஜாவருணி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குழந்தை, கணவர் சிவக்குமார் மற்றும் தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழிக்கு நன்றி. அவரால் பிரசவம் பார்க்கப்பட்டது உண்மையிலேயே எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இப்படி ஒரு மருத்துவரை எனது வாழ்நாளில் தான் சந்தித்ததில்லை. ஒரு டாக்டராக மட்டுமல்லாமல், அவர் ஒரு தாயாக மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.  என்னுடைய குழந்தை அவரது கைகளால் உலகத்தைப் பார்க்க அழைத்து வரப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பாக்கியசாலி தான்’ என்று கூறியுள்ளார்.