முதல் போட்டியிலேயே அதிரடி சதம்: அசத்தும் இளம் வீரர் பிரித்வி ஷா!

 

முதல் போட்டியிலேயே அதிரடி சதம்: அசத்தும் இளம் வீரர் பிரித்வி ஷா!

அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார் இந்திய வீரர், பிரித்வி ஷா.

ராஜ்கோட்: அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார் இந்திய வீரர், பிரித்வி ஷா. 

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, கே.எல்.ராகுலையும் அறிமுக வீரர் பிருத்வி ஷாவையும் தொடக்க வீரர்களாக களமிறக்கியது.

ஆனால், கப்ரியல் வீசிய முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் களமிறங்கிய புஜாராவுடன் கைகோர்த்த பிரித்வி ஷா, 99 பந்துகளில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

இருப்பினும், 154 பந்துகளுக்கு 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரித்வி ஷா தற்போது ஆட்டமிழந்துள்ளார். அவருடன் விளையாடி வந்த புஜாராவும் 86 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். தற்போது, 65-வது ஓவர் முடிவில் 273 ரன்கள் குவித்து இந்திய அணி விளையாடி வருகிறது. கேப்டன் கோஹ்லியும், ரஹனேவும் களத்தில் ஆடி வருகின்றனர்.

அறிமுகப்போட்டி என்ற பதற்றமே சிறிதும் இல்லாமல் ஆடி அசத்திய பிரித்விக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் 293-வது வீரராக பிரித்வி ஷா அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.