முதல் பட சம்பளத்தை கேரள மழை வெள்ளத்துக்கு அளித்த துருவ் விக்ரம்!

 

முதல் பட சம்பளத்தை கேரள மழை வெள்ளத்துக்கு அளித்த துருவ் விக்ரம்!

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படமான ‘வர்மா’ படத்தின் சம்பளத்தை கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு அளித்துள்ளார்

சென்னை: சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படமான ‘வர்மா’ படத்தின் சம்பளத்தை கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு அளித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வர்மா’ படத்தின் தமிழ் சினிமாவில் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ’அர்ஜுன்’ ரெட்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக ’வர்மா’ திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘வர்மா’ பட டீசர் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்ததன் மூலம் துருவ் விக்ரம், தான் பெற்ற முதல் சம்பளத்தை மழை வெள்ளத்தால் உருக்குலைந்து போன கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக அளித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ’வர்மா’ படத்தில் பெற்ற சம்பளத்தை தயாரிப்பாளர் முகேஷுடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரமின் இத்தகைய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.