முதல்வர் மேசை மேலே ஏறி டான்ஸ் ஆடுனவருதான் ஸ்டாலின்: முதல்வர் எடப்பாடி மரண கலாய்!

 

முதல்வர் மேசை மேலே ஏறி டான்ஸ் ஆடுனவருதான் ஸ்டாலின்: முதல்வர் எடப்பாடி மரண கலாய்!

அரக்கோணத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் முதல்வர் மேசை மீது ஏறி நடனம் ஏறிய ஸ்டாலின் எப்படி நாட்டைக் காப்பாற்றுவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரக்கோணம்: அரக்கோணத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் முதல்வர் மேசை மீது ஏறி நடனம் ஏறிய ஸ்டாலின் எப்படி நாட்டைக் காப்பாற்றுவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 சுவாரஸ்யமாக மாற்றியுள்ள தேர்தல் களம் 

admk dmk

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதும், அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்காக முதல்வர் எடப்பாடி களமிறங்கியதும் தேர்தல் பிரசாரத்தைக் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. 

 ரொம்ப ராசியான ஆளுப்பா வைகோ 

vaiko

இந்நிலையில் பாமக வேட்பாளர் ஏ.கே,மூர்த்திக்கு ஆதரவாக அரக்கோணத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது  மக்கள் மத்தியில் பேசிய அவர், ‘திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒண்ணா  சேர்ந்துப்பாங்க. உதாரணத்துக்கு வைகோ. அவரோட பேச்சு எல்லாம்  ஒரு பேச்சே இல்லங்க. என்ன பேச்சு பேசுனாரு. கட்சியில இருந்தே பிரிஞ்சி போனவரு, இப்போது அவங்க கூடவே கூட்டணி சேர்ந்திருக்காரு.  ஒருவகையில் அதுவும் நல்லது தான். ஏன்னா ரொம்ப ராசியான ஆளு. கூட்டணிக்கும் ரொம்பவே ராசியா இருக்கும்’ என்றார்.

மேசை மேல் ஏறி டான்ஸ் ஆடிய ஸ்டாலின் 

mk stalin

இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி, ‘ ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கலைக்க எவ்வளவோ பாடுபட்டாரு. சட்டசபையில என்னமா ஆட்டம் போட்டாரு. நீங்களே பார்த்திருப்பீங்க. என்னுடைய மேசை மேல ஏறி ஆட்டம் ஆடினார்.  பெண் அமைச்சர் கூட மேசையில் ஏறி நடனம் ஆடினாங்க. இவர்களா நாட்டைக் காப்பாத்த போறாங்க? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிச்சாமி. 

பேசுற பேச்சுக்கும், பண்ணுற சேட்டைக்கும் அளவே இல்ல!

stalin

எது எப்படியோ தேர்தல் வந்தாலும் வந்துச்சு நம்ம அரசியல்வாதிகள் பேசுற பேச்சுக்கும், பண்ணுற சேட்டைக்கும் அளவே இல்லாம போயிட்டு இருக்குன்னு ஒரு பக்கம் மக்கள் புலம்பிட்டு இருக்க, நம்ம ஆட்களோ கொஞ்சமும் அசராம, அவங்க பாட்டுக்கு ஒரு ஃப்லோல போயிட்டு  இருக்காங்க..!

இதையும் வாசிக்க: பொள்ளாச்சி விவகாரம்: அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க நிர்வாகி மகனுக்கு சம்மன்; அதிர்ச்சியில் தி.மு.க தலைமை!