முதல்வர் முன் தீக்குளிக்க முயன்ற பெண்-கணவனே கண்டவனை கூட்டி வந்து கற்பழிக்க வைத்த கொடூரம் … 

 

முதல்வர் முன் தீக்குளிக்க முயன்ற பெண்-கணவனே கண்டவனை கூட்டி வந்து கற்பழிக்க வைத்த கொடூரம் … 

இன்றைய காலகட்டத்தில், நடைபெறும்  பாலியல் குற்றங்கள்  அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றன .
ஒரு பெண் தனது கணவரின் நண்பர்களால் கணவன் சம்மதத்துடன் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது .பலாத்காரத்துக்குள்ளான பெண் அவர்கள் மீது நடவடிக்கை கோரி முதல்வர் வீட்டு முன்னாள் தீக்குளிக்க முயன்றபோது போலீசாரால் தடுத்து காப்பாற்றப்பட்டார் .

இன்றைய காலகட்டத்தில், நடைபெறும்  பாலியல் குற்றங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஒரு பெண் தனது கணவரின் நண்பர்களால் கணவன் சம்மதத்துடன் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது .பலாத்காரத்துக்குள்ளான பெண் அவர்கள் மீது நடவடிக்கை கோரி முதல்வர் வீட்டு முன்னாள் தீக்குளிக்க முயன்றபோது போலீசாரால் தடுத்து காப்பாற்றப்பட்டார் . 

இந்த வழக்கில் கிடைத்த தகவல்களின்படி, மொஹல்லாவில் வசிக்கும் ஒரு திருமணமான பெண், கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதால், நவம்பர் 19 ஆம் தேதி  குற்றம் சாட்டப்பட்ட கணவரை மட்டும் காவல்துறையினர் சிறையிலடைத்தனர். ஆனால் அவரது நண்பர்கள் கைது செய்யப்படவில்லை. செவ்வாயன்று, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி லக்னோவில் உள்ள முதல்வர் இல்லத்தின் முன் பாதிக்கப்பட்ட பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னை தீ வைத்து தற்கொலை செய்து  கொள்ள முயன்றார், ஆனால்  போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக  போலீசார் கூறுகையில், “புதன்கிழமை பதான்புராவில் வசிக்கும் டாக்டர் தஸ்லிம் மற்றும் சாதிக் ஆகியோர் தங்கள் வீட்டில் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய மூன்றாவது குற்றவாளி கெடா ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். அவரைத்தேடி பிடிக்க போலீசாரால் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது “.என்றனர்.