முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்

 

முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

தேனி: கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் கொள்ளை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயன், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸிடம் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் இதுகுறித்து பேசுகையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அந்த சம்பவம் முதல்வர் பழனிசாமி ஏற்பாட்டில்தான் நடந்ததா? என்பது விசாரணையில்தான் தெரிய வரும். முதல்வர் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதால் அவர் தனது பதவியை விட்டு விலகி வேறு ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும். தான் நிரபராதி என நிரூபித்தபின் மீண்டும் முதல்வர் பதவிக்கு வரலாம். இதை அவர் செய்வாரா? என்பது தெரிய வில்லை என்றார்.