முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

 

முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கு பிறப்பித்தார். அதன்பிறகு அதனை மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 2000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்னும் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். 

TN Assembly

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மே 2ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மே 3 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடியவுள்ள நிலையில், நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.