முதல்வர் பழனிசாமியுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு

 

முதல்வர் பழனிசாமியுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு

முதல்வருக்கு எதிராகப் பொதுவெளியில் கருத்துகளை கூறிவந்த எம்.எல்.ஏ கருணாஸ், இன்று திடீரென அவரை சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை: முதல்வருக்கு எதிராகப் பொதுவெளியில் கருத்துகளை கூறிவந்த எம்.எல்.ஏ கருணாஸ், இன்று திடீரென அவரை சந்தித்து பேசியுள்ளார். 

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றவர் கருணாஸ். இவர் சில மாதங்களுக்கு முன்னர், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் பழனிசாமியை தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், திடீரென ஒரு நாள் கருணாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த கருணாஸ், அரசியல் நிகழ்வுகளில் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்தார். 

karunas

இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை கருணாஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரிடம் தனது தொகுதி சம்பந்தமான கோரிக்கை மனு ஒன்றை அளித்த கருணாஸ், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவர் அளித்திருந்த மனுவை அண்மையில் திரும்பப் பெற்றிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் கருணாஸ் சந்திப்பு நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.