முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா..!?

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா..!?

தமிழகத்தின் நலனுக்காக அமெரிக்கா, துபாய், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர்  இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில், எடப்பாடியிடம் எதிர்க் கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுபயணம் குறித்த வெள்ளை அறிக்கை வெளிடயிடப் பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழகத்தின் நலனுக்காக அமெரிக்கா, துபாய், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர்  இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில், எடப்பாடியிடம் எதிர்க் கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுபயணம் குறித்த வெள்ளை அறிக்கை வெளிடயிடப் பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

CM

முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன;

அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு – செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை” என்று வெளியிடத் தயாரா?

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் ‘பாராட்டு விழா’ நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும்; இல்லாவிட்டால், முதலமைச்சரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக் கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும்.

Stalin

சிலரை பலநாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மு.க ஸ்டாலின் தங்களது ஆட்சிக்காலத்தில்..2006-2010 தி.மு.க ஆட்சியில் ருபாய். 46,091 கோடி அந்நிய முதலீட்டால் 2.21 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சவாலை ஏற்பாரா முதல்வர் எடப்பாடி..!?.