முதல்வர் எடப்பாடியிடம் 7 கோடி சீட்டிங் போட்ட கருணாஸ்….பரபரப்பு கிளப்பும் ராதாரவி…

 

முதல்வர் எடப்பாடியிடம் 7 கோடி சீட்டிங் போட்ட கருணாஸ்….பரபரப்பு கிளப்பும் ராதாரவி…

சென்ற நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என பாண்டவர் அணியினர் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை

’நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியில் 9 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் செய்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை’ என்று மீண்டும் அடித்துக்கூறுகிறார் சமீபத்தில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்ட நடிகர் ராதாரவி.

radharavi

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் ராதா ரவி, ’சென்ற நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என பாண்டவர் அணியினர் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கடந்த தேர்தலில் நான் எனக்கு ஓட்டுப் போட்டால் சங்கத்துக்கு லாபம், பாண்டவர் அணிக்கு ஓட்டுப் போட்டால் எனக்கு லாபம் என்று கூறினேன். தற்போது எனக்குதான் லாபம். நான் அதிக படங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடித்ததேன். 

karunas

பாண்டவர் அணி இதுவரை திரட்டிய நிதிகளில் ரூபாய் 9 கோடி வரை மோசடி செய்திருக்கிறது. அதே அணியைச் சேர்ந்த நடிகர் கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 7 கோடி ரூபாய் வாங்கிவிட்டு அரசியல் ரீதியாக  ஏமாற்றியுள்ளார். இப்படி ஏமாற்றுப் பேர்வழியான இவர் எப்படி நடிகர் சங்கத்துக்கு நன்மை செய்யய முடியும்.

vishal

நலிவடைந்தவர்களுக்கு உதவுவதாகக் கூறி நாசர்,விஷால், கருணாஸ் போன்றவர்கள் மட்டுமே வளமடைந்திருக்கிறார்கள். நடிகர் சங்கத்தில்  ஓட்டுப்போடும் தகுதியை எனக்கு இல்லாமல் செய்திருக்கிறார்கள். அது ரத்தாகும் வரை நடிகர் சங்கத் தேர்தலை நடத்தவிடவே மாட்டேன்’என்று உறுதியாகக் கூறுகிறார் ராதாரவி.