முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கு உத்தரவு

 

முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கு உத்தரவு

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை: முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி முதுநிலை கோவில்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த கோவில்களின் செயல் அலுவலகர்கள், இணை அல்லது உதவி கமிஷனர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதனால் தக்கார், அறங்காவலரின் தீர்மானத்தின்படி இன்று மாலைக்குள் (ஏப்ரல்.24) அறநிலைய துறைக்கு உரிய நிதியை கோவில்களின் உபரி நிதியில் இருந்து எடுத்து முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.10 கோடி நிதி 47 கோவில்களின் உபரி நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது.

ttn

அந்த வகையில் ரூ.35 லட்சம் நிதி அளிக்க வேண்டிய கோவில்களாக பழனி, திருச்செந்தூர், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ஆகியவை உள்ளன.

மேலும் ரூ.25 லட்சம் நிதி அளிக்க வேண்டிய கோவில்களாக பண்ணாரி, அழகர் கோவில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி ஆண்டவர், மாங்காடு, திருப்பரங்குன்றம், சங்கரன்கோவில், சுவாமி மலை, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆகியவை உள்ளன.

ரூ.15 லட்சம் நிதி அளிக்க வேண்டிய கோவில்களாக காஞ்சிபுரம் தேவராஜர், திருவொற்றியூர் தியாகராஜர், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மேல்மலையனூர் அங்காளம்மன் ஆகியவை உள்ளன.