முதல்வரிடம் நிவாரண தொகையை வழங்கிய மாற்று திறனாளி! வைரல் புகைப்படங்கள்!

 

முதல்வரிடம் நிவாரண தொகையை வழங்கிய மாற்று திறனாளி! வைரல் புகைப்படங்கள்!

சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் கால்களால் வாக்கு செலுத்தி அசத்தினார் பிரணவ்.

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிரணவ். மாற்று திறனாளியான இவருக்கு இரண்டு கைகளும் இல்லை. ஆனால்  அதை பற்றி கவலைப்படாத பிரணவ்   தனது இரண்டு கால்களை கைகள் போல பயன்படுத்திச் சாதித்து வருகிறார், சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் கால்களால் வாக்கு செலுத்தி அசத்தினார் பிரணவ்.

pinarayi

இந்நிலையில் பிரணவ் இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவரை வரவேற்ற பினராயி விஜயன் அவரது கால்களை பிடித்து குலுக்கி வரவேற்றார். பின்பு முதல்வரிடம் கால்களின் மூலமாகவே கேரள மாநில நிவாரணத்துக்கு நிதியளித்தார். அதேபோல் தனது கால்களின் துணையுடன், முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டார். இந்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது