முதல்ல உங்க வேலையை ஒழுங்க செய்யுங்க: பத்திரிகையாளர்களை விளாசிய வரலட்சுமி!

 

முதல்ல உங்க வேலையை ஒழுங்க செய்யுங்க: பத்திரிகையாளர்களை விளாசிய வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குப் தக்க பதிலடி கொடுத்துள்ளார்

சென்னை: நடிகை வரலட்சுமி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குப் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியின் அம்பாசிடராக நடிகை வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை வரலட்சுமி கலந்து கொண்டு சமீபத்தில் தங்கம் வென்ற கோமதிக்கு தனது  பாராட்டை தெரிவித்தார். 

அப்போது ஒரு நிருபர், வெற்றி பெற்ற பின்னரே அவரை பாராட்டுகின்றீர்கள், இதுபோன்ற திறமைசாலிகளை ஏன் முன்கூட்டியே அறிந்து அவர்களுக்கு உதவுவதில்லை என்ற கேட்க, இதற்கு பதிலளித்த வரலட்சுமி, ‘பத்திரிகையாளர்களான நீங்களே வெற்றி பெற்ற பின்னர் தான் கோமதியைத் தலைப்பு செய்தியில் போட்டீர்கள். நீங்கள் தான் இதுபோன்ற திறமைசாலிகளைச் செய்தியின் மூலம் வெளியே கொண்டு வரவேண்டும். 

சினிமா ஆடியோ விழா போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை நீங்கள் தான் இதற்கும் தர வேண்டும், அப்படி செய்தால் தான் திறமையானவர்கள் வெளியே தெரிவார்கள். எனவே முதல்ல உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார். 

அதைத்தொடர்ந்து மற்றொருவர் ‘கோமதிக்கு நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்’ என்று கேட்க அதற்கு வரலட்சுமி ‘இதுவரை எதுவும் செய்யவில்லை இனிமேல் தான் செய்யணும். என்னைக் கேள்வி கேட்கிறீங்களே, நீங்க என்ன உதவி செஞ்சீங்க.. என்ன இன்னும் செய்யலையா? அப்புறம் ஏன் என்னை மட்டும் கேள்வி கேட்கிறீங்க? என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.