முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது….

 

முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது….

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.

இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பங்கு வர்த்தகம் நிலவரம் இன்று ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருந்தனர். இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

எச்.டி.எப்.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம், மாருதி சுசுகி இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டி.சி.எஸ்., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஐ.டி.சி. உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,043 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,449 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 178 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.151.97 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக இன்று முதலீட்டாளர்கள் சுமார் சுமார் 22 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் இழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.19 லட்சம் கோடியாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.28 புள்ளிகள் உயர்ந்து 40,487.43 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,937.50 புள்ளிகளில் நிலை கொண்டது.