முதலில் இஸ்லாம், பிறகு கிறிஸ்தவர்கள்… கடைசியில் யார்? நடிகர் சித்தார்த் விலாசல்!

 

முதலில் இஸ்லாம், பிறகு கிறிஸ்தவர்கள்… கடைசியில் யார்? நடிகர் சித்தார்த் விலாசல்!

“முதலில் அவர்கள் இஸ்லாமியர்களை பிரிப்பார்கள். பிறகு கிறிஸ்தவர்கள், பிறகு மற்ற மதங்கள், அதன் பிறகு ஒடுக்கப்பட்ட சாதியினர், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும். பிரிப்பதற்கு அவர்கள் எப்போதுமே வழிகளை தேடுகின்றனர். வெறுப்பை ஏற்படுத்துவதற்கு எப்போதும் வழிகளைத் தேடுகின்றனர். அதுவே அவர்களின் வழியாகவும் உள்ளது. ஃபாசிசத்துக்கு மறுப்பு சொல்லுங்கள். இந்தியாவைக் காப்பாற்றுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடிகர் சித்தார்த் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அ.தி.மு.க-வை அவர் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சித்தார்த்த நேற்றும் இன்றும் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

Actor Siddhardh

நேற்று வெளியிட்டதில், “முதலில் அவர்கள் இஸ்லாமியர்களை பிரிப்பார்கள். பிறகு கிறிஸ்தவர்கள், பிறகு மற்ற மதங்கள், அதன் பிறகு ஒடுக்கப்பட்ட சாதியினர், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும். பிரிப்பதற்கு அவர்கள் எப்போதுமே வழிகளை தேடுகின்றனர். வெறுப்பை ஏற்படுத்துவதற்கு எப்போதும் வழிகளைத் தேடுகின்றனர். அதுவே அவர்களின் வழியாகவும் உள்ளது. ஃபாசிசத்துக்கு மறுப்பு சொல்லுங்கள். இந்தியாவைக் காப்பாற்றுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டின் தொடர்ச்சியாக இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “எத்தனை பேர் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று பாருங்கள். திசைதிருப்புதல். மோசடி. மறுப்பு. ஃபாஸிஸ்டுகளின் ஆயுதங்கள் இவைதான். எச்சரிக்கையாய் இருங்கள். ஃபாசிசத்துக்கு எதிராக நில்லுங்கள். சரியான இந்தியாவுக்காக போராடுங்கள்” என்று கூறியுள்ளார்.

 

நடிகர் சித்தார்த்தின் பதிவுகள் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. பலர் கொண்டாடவும் செய்கின்றனர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சித்தார்த் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.