முதன்முறையாக பிக் பாஸ் மதுமிதாவுக்கு வாழ்த்து கூறிய சக போட்டியாளர்: குவியும் பாராட்டு!

 

முதன்முறையாக பிக் பாஸ் மதுமிதாவுக்கு வாழ்த்து கூறிய சக போட்டியாளர்: குவியும் பாராட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் கூட சக போட்டியாளர்கள் யாரும் மதுமிதாவை சந்திக்கவில்லை. மதுமிதாவும் அவர்களை  சந்திக்கவில்லை. 

நடிகை மதுமிதாவின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு சாக்ஷி பதிலளித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். 

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு  போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

madhu

இருப்பினும் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை. பல இடங்களில் அவர்களின் பெயர்களைக் கூட யாரும் சொல்லவில்லை. மதுமிதா  மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றார் என்று சொல்லப்பட்டது. ஆனால்  பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த சாண்டி, கவின், லாஸ்லியா, ஷெரின், வனிதா ஆகியோர் தன்னை தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று மதுமிதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

sakshi

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி  குறித்து அடுத்தடுத்த பதிவுகள் பதிவிடும் மதுமிதாவின் பதிவுகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தன. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் கூட சக போட்டியாளர்கள் யாரும் மதுமிதாவை சந்திக்கவில்லை. மதுமிதாவும் அவர்களை  சந்திக்கவில்லை. 

 

இந்த நிலையில் மதுமிதாவின் டிவிட்டர் பதிவு ஒன்றிற்கு சாக்ஷி தற்போது டீவீட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மதுமிதா ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் பஸ்ட் லுக்கை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் படத்தில் நானும் இருப்பது மிக்க மகிழ்ச்சி, இந்த படம் வெற்றியடைய  வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார்.

 

மதுமிதாவின் இந்த பதிவை  டீவீட் செய்த சாக்க்ஷி , உங்கள் டீவீட்டை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் இப்படத்தில் மதுமிதாவுடன், சாக்ஷியும்  நடித்துள்ளார்.

sakshi

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அவரவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில் சண்டையை மறந்து சாக்ஷி மதுமிதாவை வாழ்த்தியுள்ளது வலைதளங்களில் அவருக்கு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.