முதன்முதலாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நாள் இன்று – சுவாரஸ்யமான விஷயங்கள்
ஏப்ரல் 18 என்பது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஆகும். உலகில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நாள் ஆகும்.
மும்பை: ஏப்ரல் 18 என்பது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஆகும். உலகில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நாள் ஆகும்.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஐ.சி.எல் கிரிக்கெட் லீக் போட்டிகளை அங்கீகரிக்க பி.சி.சி.ஐ மறுத்து விட்டது. மேலும் கிரண் மோர் மற்றும் கபில் தேவ் ஐ.சி.எல் குழுவில் இணைந்ததற்காக விமர்சிக்கப்பட்டனர். பி.சி.சி.ஐ.க்கு சொந்தமான கிரிக்கெட் வசதியான தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்ததால், ஐ.சி.எல் உடனான கபில் தேவின் தொடர்பு மோதலாக கருதப்பட்டது. ஆகஸ்ட் 21, 2007 அன்று கபில் தேவ் தனது என்.சி.ஏ பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பி.சி.சி.ஐ.யின் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல் ஐ.சி.எல் முன்னேறும் என்று சுபாஷ் சந்திரா முன்னதாக கூறியிருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதன் தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் மூலம் ஒரு அறிக்கையை அளித்தது. அதன்படி ஐ.சி.எல் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்காது என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 25, 2012 அன்று கபில் தேவ் ஐ.சி.எல் பதவியை ராஜினாமா செய்ததாக பி.சி.சி.ஐ.க்கு தெரிவித்தார்.
#OnThisDay in 2008, @Bazmccullum gave #VIVOIPL the most explosive start possible.??
Travel back in time and relive the highlights from the first-ever #VIVOIPL match ?️? #RCBvKKR
— IndianPremierLeague (@IPL) April 18, 2020
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சொந்த சர்வதேச டி-20 லீக் தொடரை தொடங்கியது. ஐபிஎல் தொடர் என அந்த லீக் போட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் தேசிய கால்பந்து லீக் மற்றும் மேஜர் லீக் பேஸ்பால் ஆகியவற்றின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஐபிஎல் போட்டி தொடர் வடிவமைக்கப்பட்டது. ஏப்ரல் 18, 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 82 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று ஐபிஎல் தொடங்கிய நாளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.