முடிவுக்கு வந்தது ஆரவ்வின் ராஜபீமா! உற்சாகத்தில் ரசிகர்கள்!
நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் ராஜ பீமா திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகத் தனது சமூகவலைத்தள பாக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் ராஜ பீமா திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இவர் தற்போது நரேஷ் சம்பத் இயக்கத்தில் எஸ்.மோகன் தயாரிக்கும் ராஜ பீமா படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆராவுக்கு ஜோடியாக ஆஷிமா நார்வல் நடித்துள்ளார்.
இந்நிலையில் யானையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தாய்லாந்து என விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது விட்டதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
We have successfully wrapped up the shoot of Rajabheema#Rajabheema #arav
Coming soon pic.twitter.com/YY4qvHAqfJ— Arav (@Nafeez_Arav) March 9, 2019
நடிகர் ஆரவ் இப்படத்தில் தனது சொந்த குரலில் ஒரு பாடல் படியுள்ளது குறிப்பிடத்தக்கது.