முடிந்தால் என் மீது கருணாஸ் கை வைத்து பார்க்கட்டும்: சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் சவால்

 

முடிந்தால் என் மீது கருணாஸ் கை வைத்து பார்க்கட்டும்: சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் சவால்

கோவை: கருணாஸ் முடிந்தால் என் மீது கை வைத்து பார்க்கட்டும் என சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.

முக்குக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நான் அடிப்பேன் என பயப்படுகிறார் எனவும் முதல்வர் பழனிசாமியின் சாதியை குறிப்பிட்டும் சர்ச்சைக்குரிய வகையில்  மிகவும் தரக்குறைவாக பேசினார். அதுமட்டுமின்றி தி.நகர் துணை கமிஷனர் அரவிந்த் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதனையடுத்து கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகளை அமைத்துள்ளது. மேலும், அவரது வீட்டை நாடார் சமுதாயத்தினர் முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கருணாஸ் குறித்து அதிமுகவை சேர்ந்த சூலூர் தொகுதியின் எம்.எல்.ஏ கனகராஜ் கூறுகையில், கருணாஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆயிரம் கருணாஸ்கள் உருவாகி விடுவார்கள் . முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடித்தால் வாங்கிக்கொள்வார், ஏனென்றால் அவர் ஏசுநாதரைப் போல. கருணாஸ்க்கு தைரியம் இருந்தால் என்னை அடித்துப்பார்க்கட்டும் என சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.