முடித்திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் : தமிழக அரசு

 

முடித்திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் : தமிழக அரசு

ஆயிரத்து 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.2000 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முடி திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டதைப் போல பதிவு செய்யாதவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், ” தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிவாரண உதவித் தொகை உட்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொது மக்களும் பல்வேறு தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

ttn

முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 14 ஆயிரத்து 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.2000 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடம் அளிக்காததால் நலவாரியத்தில் பதிவு செய்யாத நபர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிதிருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதர அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற நிவாரண தொகை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இடமும் பேரூராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தின் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும். 

அந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்யவேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் களம் மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து ஏற்கனவே முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக ரூபாய் 2000 ரொக்கமாக வழங்கியது போன்று நலவாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூபாய் 2000 ரொக்கமாக வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் வருவாய் நிர்வாக ஆணையர் வழங்குவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.