முகம் எரிந்த நிலையில் ஆணின் சடலம்: மதுபாட்டில்கள்; சிகரெட் சூடு; அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

 

முகம் எரிந்த நிலையில் ஆணின் சடலம்: மதுபாட்டில்கள்; சிகரெட் சூடு; அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

சிலர் பார்த்துவிட்டு கிராம அலுவலரிடம் சொல்ல, அவரோ பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சதோப்பு வடக்கு அம்மன்நகர் பின்புறம் உள்ள கருவேலங்காடு பகுதியில் எரிந்த  நிலையில் ஆணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதை அப்பகுதியாக சென்ற சிலர் பார்த்துவிட்டு கிராம அலுவலரிடம் சொல்ல, அவரோ பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். 

ttn

புகாரின்  அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு நடத்திய சோதனையில்,  சடலத்தின் வலது காதில் காயமும், இடது கையில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்ததை  கண்டுபிடித்தனர். மேலும் மண்ணெண்ணெய்யை ஊற்றி எரிக்கப்பட்டிருந்த அந்த சடலத்தின் அருகில் மதுபாட்டில்கள் இருந்தது. து மட்டுமில்லாமல் வலது கையில் சிங்கம் முத்திரை இருந்துள்ளது.  இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ttn

கொல்லப்பட்டவர் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என போலீசார் தீவிர வ விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.