முகமது ஷமியின் மனைவி நள்ளிரவில் அதிரடி கைது: ரசிகர்கள் அதிர்ச்சி!

 

முகமது ஷமியின் மனைவி நள்ளிரவில் அதிரடி கைது: ரசிகர்கள் அதிர்ச்சி!

 இந்திய அணி கிரிக்கெட் வீரரின் முகமது ஹமியின் மனைவி கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 உத்தரப் பிரதேசம்:  இந்திய அணி கிரிக்கெட் வீரரின் முகமது ஹமியின் மனைவி கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

muhamad

கடந்த 2018-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

mohammed

மேலும், பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரையும் தெரிவித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  பின்னர், சூதாட்டத்தில் ஷமி ஈடுபடவில்லை என்பதை பிசிசிஐ உறுதிசெய்ததோடு அணியில் அணியில் இடம் கொடுத்தது.

mohammed

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள ஷமி வீட்டிற்குள் நேற்று நள்ளிரவில் நுழைந்த அவரது மனைவி ஹசின் ஜஹான்  ஷமியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் செல்ல, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஹசின் ஜஹானை கைது செய்தனர்.  இதையடுத்து 24 மணிநேரம் காவலிலிருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். 

mohammed

தற்போது முகமது ஷமி அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடி வருகிறார். அதுமட்டுமின்றி உலகக் கோப்பைக்கான அணியிலும் ஷமி  இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.