முகநூலில் வெளியான ஆபாச புகைப்படம்: காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சி தரும் சம்பவம்!?

 

முகநூலில் வெளியான ஆபாச புகைப்படம்: காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சி தரும் சம்பவம்!?

முகநூலில் தன்னுடைய படத்தை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்: முகநூலில் தன்னுடைய படத்தை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

facebook

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தை சேர்ந்த நீலகண்டன்  மகள் ராதிகா.   இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  ராதிகாவின் புகைப்படத்தை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபாசமாகச் சித்தரித்து முகநூலில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.  

suicide

இதுகுறித்து  மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்,  சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார்,  ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து  ராதிகாவின் தற்கொலையால் மனமுடைந்த ராதிகாவின் தாய்மாமன் மகனும், காதலருமான விக்னேஷ் அப்பகுதியிலுள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேஸ்புக் பதிவினால்  இரு உயிர்கள்  பறிபோனதையடுத்து அப்பகுதி சோகமயமாகியுள்ளது.

suicide

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாகச் சித்தரித்து முகநூலில் வெளியிட்ட இளைஞரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தற்கொலைக்குக் காரணமான அந்த இளைஞரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.