முகநூலில்; மனைவிக்கு 6 ஆயிரம் பேர் ஃபாலோயர்ஸ்… கணவன் செய்த வெறி செயல்..!?

 

முகநூலில்; மனைவிக்கு 6 ஆயிரம் பேர் ஃபாலோயர்ஸ்… கணவன் செய்த வெறி செயல்..!?

தன் மனைவிக்கு ஃபேஸ் புக்கில் 6000 பேர் ஃபாலோயர்ஸ்ஸாக இருப்பதை தெரிந்து கொண்ட இளம் கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாக் கொலை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் அரங்கேறிய கொடுமை பலரையும் அதிரவைத்திருக்கிறது! 

தன் மனைவிக்கு ஃபேஸ் புக்கில் 6000 பேர் ஃபாலோயர்ஸ்ஸாக இருப்பதை தெரிந்து கொண்ட இளம் கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாக் கொலை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் அரங்கேறிய கொடுமை பலரையும் அதிரவைத்திருக்கிறது! 

naina-manglani

அஜஸ் முகமது கான் என்பவருக்கும் ‘நைனா மங்ளானி’ என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் ஆகியிருக்கிறது. வேலை விசயமாகப் போன இடத்தில்  ‘நைனா மங்ளானி’ யை தற்செயலாகப் பார்த்த அஜஸ் முகமது கான், பார்த்த முதல் நாளே காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தக் காதலை ஏற்றுக்கொண்டு இரு குடும்பத்தாரும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த கையோடு இருவரும் தனிகுடித்தனம் இருந்திருக்கிறார்கள். காதல் திருமணம் என்றாலும்  ‘நைனா மங்ளானி’ நாள் முழுக்க ஃபேஸ்புக் பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவாராம். இதனால் தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஒரு நாள் மனைவியின் மொபைலை எடுத்துப் பார்த்த அஜஸ் முகமதுக்கு பயங்கர அதிர்ச்சி! அவரது மனைவியை ஃபேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்திற்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். அவர்களோடு ஜாலியாக அரட்டையும் அடித்திருக்கிறார்.

naina-manglani-98

இது தொடர்பாக இருவருக்கும்  பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து நைனா மங்ளானி கோவித்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டாராம். போன இடத்தில் எப்போது பார்த்தாலும் சந்தேகப்படும் ஒருத்தனோடு என்னால வாழ முடியாது விவாகரத்து கொடுத்திரச் சொல்லுங்க என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். அஜஸ் முகமது விவகாரத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் இழுத்தடித்தபடியே இருந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் கடந்த 19-ம் தேதி காலையில் போனில் தனது மனையை அழைத்து அன்பாகப் பேசி… பிரச்சினையைப் பேசிக்கலாம்… நாம நேரில் சந்திக்கலாமா என்று கேட்டிருக்கிறார். ‘நைனா மங்ளானி’யும் கணவனின் பேச்சை நம்பி புறப்பட்டு வந்திருக்கிறார்.அன்று காலை முதல் மாலைவரை இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறார்கள்.அன்று முழுவதும் மனைவியின் செய்கைகளை,அவரையும் அறியாமல் கண்காணித்தபடியே இருந்திருக்கிறார் அஜஸ் முகமது கான். மனைவி அவ்வப்போது மொபைலை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்திருக்கிறார்.

naina-manglani-928

இதனால், ஆத்திரத்தின் எல்லைக்குப் போன அஜஸ் டெல்லி-ஜெய்ப்பூர் ஹை வேய்ஸ்ஸில் ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தனது மனைவியை கொடூரமாகத்  தாக்கியும், அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தில் கல்லைக் கொண்டு அடித்தும் கொலை செய்திருக்கிறார்.அடுத்த நாள் அதிகாலை அந்தப் பக்கம் வந்தவர்கள் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதைப் பார்த்து போலிஸுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

உடனடியாக மேற்கொண்ட விசாரணையில் இந்த  உண்மைகள் அனைத்தும் தெரிய வந்திருக்கிறது. இந்த ஃபேஸ்புக்கால் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியப் போகுதோ தெரியல..!?