முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ‘நாகினி’ நடிகை!?
பிரபல நடிகை மௌனி ராய் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மும்பை: பிரபல நடிகை மௌனி ராய் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாகினி தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மௌனி ராய். அதில், பாம்பாகவும், மனைவியாகவும் அவர் நடிப்பில் பரிமாணம் காட்டியிருந்தார். அதன் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது ‘பிரமாஸ்திரா’ என்ற படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று மும்பையில் நடைபெற்ற பாரத் படத்தின் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைக் கண்ட வலைதளவாசிகள், ‘மெளனியின் முகத்திற்கு என்னாச்சு? அவரது முகம் மாறுபட்டு வருகிறது.
இது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதன் விளைவு தான் என்றும், முன்பே உங்கள் முகம் அழகாக இருந்தது. தற்போது படுகேவலமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக நடிகை மௌனி ராய் ‘போலே சுதியான்’ என்ற பாலிவுட் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.