முகத்தில் பிளாஸ்டிக் பை; வாயில் சிலிண்டர் டியூப்: கொடூரமாக தற்கொலை செய்துகொண்ட ரயில்வே ஊழியர்!
தொடர் சிகிச்சையெடுத்துக் கொண்ட போதும் கார்த்திக்கிற்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு இ.பி.காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கார்த்திக். 30 வயதான இவர் ரயில்வே ஊழியராக உள்ளார். இருப்பினும் கார்த்திக்கிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் காரத்திக்கு உடல்நல குறைவால் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சையெடுத்துக் கொண்ட போதும் கார்த்திக்கிற்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டுள்ளார். பின்னர் முகத்தில் பிளாஸ்டிக் சுற்றிக்கொண்டு, கேஸ் அடுப்பில் உள்ள சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகி கொண்டு சுவாசித்துள்ளார். இதனால் மூச்சு திணறி பலியாகியுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக்கின் சகோதரி அஸ்வினி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.