முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால்   ரூ.100 அபராதம் !

 

முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால்   ரூ.100 அபராதம் !

சமயம் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குபதிவும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.  

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே தேவையின்றி சுற்றி திரிய வேண்டாம் என்று போலீசார் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ttn

அதே சமயம் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குபதிவும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.  

t

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில் முகக் கவசம் அணியாமல் வெளியே  செல்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும்  வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, 6 மாதத்திற்கான வாகன ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என  அறிவித்துள்ளார்.