மீ டூ பற்றி பிக் பாஸ் ஜனனி என்ன சொல்லிருக்காங்க பாருங்க..!

 

மீ டூ பற்றி பிக் பாஸ் ஜனனி என்ன சொல்லிருக்காங்க பாருங்க..!

மீ டூ பெண்களுக்கு நல்ல விஷயம் தான் ஆனால், அதை சென்சேஷனுக்காக பயன்படுத்தாதீர்கள் என பிக் பாஸ் ஜனனி கருத்துக் கூறியுள்ளார்.

சென்னை: மீ டூ பெண்களுக்கு நல்ல விஷயம் தான் ஆனால், அதை சென்சேஷனுக்காக பயன்படுத்தாதீர்கள் என பிக் பாஸ் ஜனனி கருத்துக் கூறியுள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட்டை தொடர்ந்து இந்திய சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம் தற்போது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த மீ டூ விவகாரம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜனனி கருத்து தெரிவித்துள்ளார். ‘மீ டூ பெண்களுக்கு தேவையான விஷயம் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சினிமாதுறையில் மட்டும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக எண்ண வேண்டாம். அனைத்து துறைகளிலும் பெண்கள் தினம் தினம் பாலியல் சீண்டல்களுக்கு பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக தங்களது அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டு மீ டூ இயக்கத்தை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். பரபரப்பு கிளப்பவோ, பழி தீர்க்கவோ, சென்சேஷனுக்காகவோ பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் 6 மாதம், 6 வருடம் என்று காத்திருக்காமல், உடனடியாக உங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பகிருங்கள். குற்றவாளிகளின் மீது புகார் கூறி அவர்களது முகத்திரையை கிழியுங்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.