மீ டூ சர்ச்சை: அர்ஜுன் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

 

மீ டூ சர்ச்சை: அர்ஜுன் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

மீ டூ விவகாரத்தில் நடிகை ஸ்ருதிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: மீ டூ விவகாரத்தில் நடிகை ஸ்ருதிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

’நிபுணன்’ பட ஷூட்டிங்கின் போது நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டு அசவுகரியமாக உணர வைத்தார் என்று கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார். இதனை அர்ஜுன் மறுத்த நிலையில், கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் அர்ஜுன் – ஸ்ருதி ஹரிஹரன் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது.

அதைத் தொடர்ந்து தனது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், சட்டப்படி போராடத் தயார் என்றும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார்.

arjun

இந்நிலையில், பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் நடிகர் அர்ஜுன் மீது 354ஏ, 509, 506, 354, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவை தொடர்ந்து அர்ஜுன் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.